கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

20.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉செப்டம்பர் மாதம் தெலங்கானா ஷாத் நகரில் நடைபெற உள்ள பிசி கர்ஜனா – பிற்படுத்தப்பட்டோர் முழக்கம் மாநாட்டில் கருநாடக முதலமைச்சர் சித்த ராமைய்யா கலந்து கொள்வார் என காங்கிரஸ் மேனாள் எம்.பி. அனுமந்தராவ் அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉தொழில் வளர்ச்சியில் சமூக நீதி முக்கியம் என ‘‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் மிஷன்’’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காத சூழலில், மோடி அரசின் தெளிவற்ற நிலைப் பாடு, பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

👉 அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்கள், மற்றும் நகரங்களில் மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதற்கும் மோடி அரசால் தொடங்கப் பட்ட ‘உடான்’ திட்டம் 93 சதவீத வழித்தடங்களில் தொடங்கப்பட வில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

👉மோடி அரசின் முக்கிய நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை மோடி அரசு நியமித்து வருகிறது என ராகுல் குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை, ஹிந் தியை திணிப்பதற்கான சதி என கருநாடகா தொடக்கக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *