வடசென்னை மாவட்டம் தாணா தெருவில் நீட் ஒழிப்புப் பிரச்சார இருசக்கர வாகனப் பயணம்

1 Min Read

வடசென்னை மாவட்டம் தாணா தெருவில் நீட் ஒழிப்புப் பிரச்சார இருசக்கர வாகனப் பயணத்திற்கு இன்று (11.7.2024) காலை 10:30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன் முன்னிலையில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் பொதுமக்களுக்கு ’நீட்’ சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! எனும் தலைப்பிலான துண்டறிக்கை வழங்கப்பட்டது. நீட் தேர்வு ஒரு கண்ணிவெடி என்ற 10 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் பொதுமக்களிடையே விற்பனை செய்யப்பட்டது. துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தோழர்களிடம் உண்டியல் ஏந்திச் சென்றார். 11 மணிக்கு வாகனப்பயணம் அங்கிருந்து புறப்பட்டது. நிகழ்வில் தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், ஓட்டேரி பாஸ்கர், அயனாவரம் தேவராஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *