தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் வணிக வரித்துறை மூலம் ரூ. 3,727 கோடி வருவாய்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 11- தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, நந்தனம் ஒருங் கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், அமைச்சர் மூர்த்தி தலைமையில், ஜூன் மாதத்துக் கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத் தினரான சென்னை மணலியைச் சேர்ந்த சி.உமா மகேஸ்வரிக்கு குடும்ப நல நிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். வரி வருவாயை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும். நிலுவையில் உள்ள கோப்புகளை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பணிகளை செயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை அரசுக்கு தெரியப் படுத்தலாம். மேலும், தரவுகளின் உண்மை தன்மையைக் கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரை வில் துறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். – இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், துறையின் செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிக வரித்துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *