முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!

1 Min Read

 தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி! 
‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற்றால் 
‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! 

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக.21- ‘இண்டியா’ ‘‘I.N.D.I.A. – கூட்டணி வெற்றி பெற்றால், ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்!’’ என்று, கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட் டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

நீட் தேர்வு ரத்து போராட்டம் என்பது தி.மு.க.வின் போராட்டமோ, அரசியல் கோரிக்கையோ அல்ல! சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்!

‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு  (NEET) 

 நிச்சயம் தமிழ்நாட் டில் இருக்காது. இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்.

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *