செயற்கை (இயந்திர) நுண்ணறிவுப் பயிற்சி

1 Min Read

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்க உள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கான இந்த பயிற்சியில், இதற்கு செலவாகும் தொகையை தாட்கோவே செலுத்திவிடும் எனவும், இளைஞர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்: பயிற்சி காலம் மூன்று மாதங்கள் ஆகும். இந்த மூன்று மாதங்களில் மருத்துவத்துறை ரோபோடிக்ஸ், ஏ.அய். ரோபோடிக்ஸ் போன்ற பல்வேறு ரோபோடிக்ஸ் துறை பற்றி வகுப்புகள் எடுக்கப்படும்.

பயிற்சியின் முடிவில் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த படித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் https://iei.tahdco.com/rob_reg.php என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது பற்றிய விவரங்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *