கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

10.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*கிரிமினல் சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள தால், மாநிலங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யலாம், ப.சிதம்பரம்.
* நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தேர்வு எழுதிய மாணவர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.அய். கைது செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலித் மக்கள் பாஜகவை ஆதரிக்க வில்லையா? கர்நாடகத்தில் இருந்து ஏழு முறை எம்.பி.யாக இருந்த ரமேஷ் ஜிகஜினகி, பாஜக தலைமையிடம் கேள்வி.
* பூரி தேர் ஊர்வலத்தில், தேரில் இருந்த பாலபத்திரர் கடவுள் சிலை விழுந்ததில் 7 பேர் காயம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது, வரும் 2025 தேர்தலில் ஆளும் நிதிஷ் குமார் அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்கிறார் கட்டுரையாளர் பேராசிரியர் திவாகர்.
தி ஹிந்து:
* சமஸ்கிருதத்திற்கு மட்டுமே அதிகமான நிதியை அளிக்கும் ஒன்றிய அரசு ஏனைய மொழிகளுக்கு ஏன் உரிய நிதி தர மறுக்கிறது? அம்மொழிகளும் தேசிய மொழிகள் தானே? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
* கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் உரையின் போது முன்னாள் துணை ஜனாதிபதியும், மேல்-சபை தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு எதிராக “இழிவான” கருத்துகளை தெரிவித்ததாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ் சிறப்புரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவரிடம் அளித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* ரேபரேலி பயணத்தில் உயிர் தியாகம் செய்த வீரரின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் : அக்னி வீரர் திட்டத் திற்கு எதிர்ப்பு.
*  ராகுலை சந்தித்த பின் பேட்டி அளித்த அன்சுமனின் தாய் மஞ்சு சிங் கூறுகையில், ‘‘அக்னி வீரர் திட்டம் மூலம் ராணுவத்தை 2 விதமாக பிரிக்கக் கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.. இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசை வலியுறுத்து வதாக ராகுல் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *