வடமாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள்

2 Min Read

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.சி.அய்.டி. அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 10- ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். வடமாநிலங்களில் நடந்த முறை கேடு குறித்து அதிர்ச்சித் தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த மோசடி குறித்து சி.பி.சி.அய்.டி. காவல்துறை யினர் விசாரித்த னர். இந்த முறைகேடு தொடர் பாக சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதா னார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் காவல்துறையினர் பிடித்தனர்.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்கும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, 5 ஆண்டுகளாக இந்த வழக் கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கில் நீட்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறேன் என்றும், இதுகுறித்து துணை சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.

ஒருவருக்காக 3 இடங்களில் தேர்வு
இந்த வழக்கில் ஏற்கெ னவே சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், 2019ஆம் ஆண்டு நடந்த நீட்தேர்வை சென்னை, கோவை,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் பலர் எழுதி உள்ளனர். ஆனால் இவர்களது முகவரியில் டில்லி, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அங்கு உள்ளவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒரு மாணவருக்கு ஒரே நாளில் 3 மாநிலங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இந்த 3 தேர்வு மய்யங்களிலும் எழுதியதேர்வுகளில் கிடைத்த அதிக மதிப்பெண்ணை (473) வைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களை கேட்டு கடிதம் எழுதியும் இது வரை தேசிய தேர்வு முகமை தரவில்லை.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *