அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறியதாக அஜித் பவாரை சாடிய சரத் பவார்

1 Min Read

அரசியல்

புனே, ஆக. 21- கடந்த மாதம் சிவசேனா -பாஜக அரசில் இணைந்த கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை வழிநடத்திய தனது மருமகன் அஜித் பவாரின் பெயரைக் குறிப்பிடா மல், சிலர் அமலாக்கத் துறை விசார ணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டதாக அஜித் பவாரை மறைமுகமாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சாடியுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், “வளர்ச்சிக்கான காரணத்திற்காக ஆளும் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறோம் என்று அவர் கள் கூறுவது உண்மையல்ல.. கடந்த காலங்களிலும் இது போன்ற மாற்றங் கள் இருந்திருக்கின்றன. எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்களிட மிருந்து விலகி சென்றுள்ளனர்.

அவர்களுக்கு (அஜித் பவார் குழு) எதிராக ஒன்றிய அரசு அமலாக்கத் துறை விசார ணைக்கு  உத்தர விட் டதால் அவர்கள் தேசிய  வாத காங்கிரசில் இருந்து விலகியுள்ள னர். அவர்கள் தேசிவாத காங்கிரசிலிருந்து விலகி இன்னொரு கட்சி யுடன் (பாஜக) சேர அறிவுரை கூறப் பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேரவில்லையென் றால் வேறு ஏதேனும் இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.

ஆனால், சிலர் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ள துணிந் தனர். மேனாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை தேசியவாத காங்கிர சில் இருந்து விலக வலியுறுத்தியும் அவர் எங்களது கட்சியுடன் உறுதி யோடு நின்றார்” என்று சரத் பவார் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *