ஜெயங்கொண்டம், ஆக. 21- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16.08.2023 அன்று நடை பெற்றது.
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்கள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட இரண்டு பிரிவிலும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். ஆண் கள் பிரிவில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் மாவட்ட போட்டியில் பங்குபெற தகுதி பெற்றனர்.
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இரு பால் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.