ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப் பந்து போட்டியில் முதலிடம்

1 Min Read

அரசியல்

ஜெயங்கொண்டம், ஆக. 21- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16.08.2023 அன்று நடை பெற்றது.   

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்கள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட இரண்டு பிரிவிலும் முதலிடத்தை  பிடித்து வெற்றி பெற்றனர். ஆண் கள் பிரிவில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் மாவட்ட போட்டியில் பங்குபெற தகுதி பெற்றனர். 

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களை  பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இரு பால் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *