அறிவியல் சாதனை

Viduthalai
3 Min Read

ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவில் 
லேண்டர் தரை இறங்கும்: இஸ்ரோ அறிவிப்பு

அறிவியல், தமிழ்நாடு

சென்னை, ஆக. 21- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ‘சந்திரயான் -3’ விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 

அதன் பின்னர், புவி சுற்று வட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த ‘சந்திரயான்-3’ ஆகஸ்டு 1ஆம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 5 நாள் பயணத் துக்குப் பிறகு ஆகஸ்டு 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் ‘சந்திரயான்-3’ நுழைந்தது. அதன்பிறகு, சுற்றுப் பாதையின் உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே ‘சந்திரயான்-3’ கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் இருந்த போது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து ‘விக்ரம் லேண் டர்’ கருவி பிரிக்கப்பட்டது.

அதன்பிறகு, உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்தன. இனி உந்துவிசை கலன் தொடர்ந்து நிலவை சுற் றியபடி அடுத்த சில மாதங்க ளுக்கு ஆய்வுப்பணியை மேற் கொள்ளும்.

அதேநேரத்தில், லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத் தைக் குறைத்து, நிலவின் தென் துருவத்தில் அதை தரையிறக்கு வதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, திரவ வாயு எந்திர இயக்கத்தின் மூலம், நிலவின் தரையில் இருந்து 113 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு லேண்டர் கருவி கடந்த 18-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 2-ஆவது கட்டமாக லேண்டர் கரு வியின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் நேற்று முன்தினம் (19.8.2023) வெற்றிகரமாக குறைக் கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக வந்துள்ள லேண்டர், குறைந்த பட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலை விலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக, 40 நாள் தொடர் பயணத்தின் நிறைவு நிகழ்வான, லேண்டரை நிலவில் தரையிறக் குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ஆம் தேதி) மாலை 5.45 மணிக்கு மேற்கொள்ளப்பட இருந்தது. அதாவது, எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டர் கருவியின் வேகத்தை படிப்படியாக குறைத்து, இறுதி யாக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வந்து, மெதுவாக நிலவில் தரையிறக்கப்பட இருக்கிறது.

‘சந்திரயான்-2’ விண்கலம் இந்த இடத்தில்தான் தோல்வி அடைந்தது என்பதால், இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டர் கருவி நிலவில் தடம் பதிக்கச் செல்லும் ஒவ்வொரு நொடியையும் மிகவும் எச்சரிக் கையுடன் கண்காணித்து வரு கின்றனர்.

19 நிமிடங்கள் தாமதம்

இம்முறை லேண்டரில் பல் வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதால், வெற்றிகரமாக நில வில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம் பிக்கையுடன் உள்ளனர். லேண்டர் தரையிறங்கிய 2 மணி நேரத்தில், அதிலுள்ள ரோவர் வாகனம் சாய்வுதளம் வழியாக நிலவில் இறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக் கிறது.

இந்த நிலையில், நேற்று திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங் கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக் கிறது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-

மாலை 6.04-க்கு தரையிறங்கும்

லேண்டர் கருவி நல்ல நிலையில் சீரான இயக்கத்தில் உள்ளது. லேண்டர் தனது உட் புற சோதனைகளைச் செய்து கொண்டு, தரையிறங்க நிர்ணயிக் கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கிறது. அனைத்து செயல்பாடுகளையும் முடித்து லேண்டர் கருவி நில வின் தென்துருவத்தில் ஆகஸ்டு 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்க இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. 

இந்நிலையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்ட ரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *