புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!

1 Min Read

சென்னை, ஜூலை 9- புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்றுள்ள மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற |நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்கிறேன். குற்றவியல் சட்டம் என்பது அரசமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிபதிகள், வழக்குரைஞர்கள், காவல் துறையினர், பேராசிரியர்கள், வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்”
இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *