திராவிட மாடல் அரசில் உடல் உறுப்பு கொடை செய்ய இதுவரை 8,234 பேர் முன்பதிவு

1 Min Read

சென்னை, நவ. 18- மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு களை கொடையாக வழங்கிய விழுப்புரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த அராஜகன் கலியமூர்த்தி (வயது 26) என்ற இளைஞரின் உடலுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.

பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை செய்பவர்களின் உடலுக்கு, அரசு மரியாதை செய்யப்படும் என, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்பின், 55 நாட்களில், 26ஆவதாக, உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு, அரசு மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. 

மேலும், இணையதளத்தில் மட்டும், 2,890 பேர் உறுப்பு கொடை அளிக்க முன்பதிவு செய்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை, 8,234 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம், சிறுநீரகத்துக்கு 6,229 பேர்; கல்லீரல் 465; இதயம் 80; நுரையீரல் 68; இதயம் மற்றும் நுரையீரல் 25; கை 26; சிறுகுடல் 2; சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 42; சிறுநீரகம் மற்றும் கணையம் 41; இதயம் மற்றும் கல்லீரல் 1; கணையம், சிறுகுடல், வயிறு ஒருவர் என, 7,007 பேர் பல்வேறு விதமான உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *