தருமபுரியில் தி.மு.க. போராட்டம்: கழகப் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்

Viduthalai
1 Min Read

அரசியல்

தர்மபுரி, ஆக. 21- தருமபுரியில்  மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் நடைபெற்ற பட்டினி போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடங்கி வைத்து பேசினார். 

மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பி.சுப்பிரமணியன், மேனாள் கல்வி அமைச்சர் பி. பழனியப்பன் மற்றும் 3 ஆயிரத் துக்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கழக தலைவர் கு. சரவ ணன், மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப் பினர் கதிர், கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, நகர திராவிடர் கழகத் தலைவர் கரு.பாலன், மண்டல ஆசிரியர் அணி அமைப் பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, விடு தலை வாசகர் வட்ட தலைவர்  க. சின்னராஜ், பழனி  மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *