இதய நோய் சிகிச்சைக்காக சென்னையில் சிறப்பு மய்யம்

1 Min Read

தேசிய அளவிலான இதயநோய் வல்லுநர்கள் இணைந்து, புதிய சுண்டுபிடிப்புகளுக்கான தனி மய்யத்தை, சென்னையில் துவக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில், இந்திய இதயவியல் நல அமைப்பின் தமிழ்நாடு பிரிவு ஆகியவை இணைந்து, இதய நோய் சிகிச்சை மேம்பாடு குறித்த, நான்கு நாள் தேசிய மருத்துவ மாநாட்டை சென்னையில் 5.7.2024 துவக்கின.

மாநாட்டில், தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில் செயலர் கேசவமூர்த்தி பேசியதாவது:

மாநாட்டில், 3,000க்கும் மேற்பட்ட இதய நிபுணர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுதும், 1,700க்கும் மேற்பட்ட மருத்துவனைகளில் பெறப்பட்ட, மருத்துவ சிகிச்சைமுறை குறித்த தரவுகள், மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

இதயவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக, பிரத்யேக மய்யம் சென்னையில் துவக்கப்பட உள்ளது. இந்த மய்யம் வாயிலாக, நவீன முறையில் பாதிப்புகளை கண்டறியவும், சிகிச்சை கிடைக்கவும் ஊக்கப்படுத்தப்படும்.

– இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *