வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

பெங்களூரு கழகத் தோழர் வெண்மலர் வரதராஜன் (வயது-65) நேற்று (7-7-2024) மதியம் 2 மணி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

கருநாடக மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற வர், முதுபெரும் பெரியாரிய குடும்பத்திலிருந்து வந்தவர். தனது பதின்பருவ காலம் தொட்டே தந்தை பெரியாரின் பணி முடிக்க கழகத்திற்கு தனது பங்களிப்பை வழங்கி வந்தார். நாம் பெங்களூரு செல்லும்போதெல்லாம் தவறாமல் ரயில் நிலையத்திற்கு வந்து வரவேற்க முதல் வரிசையில் நிற்பவர். இயக்க நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்டு தொண்டாற்றி வந்தவர். குடும்பத்தில் தன்னுடைய சகோதரிகளையும் படிக்கவைத்து ஆசிரியர்களாக்கியவர். மேலும் தனது குடும்பம் முழுவதையும் பகுத்தறிவுக் குடும்பமாக்கியவர். சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் துவக்கி நடத்தி வந்தவர்.

நம்மீது எப்போதும் அன்பைப் பொழியக்கூடிய தோழர் வெண்மலர் வரதராஜன் மறைவால் துயருறும் அவர்தம் வாழ்விணையர் வரதராஜன், குடும்பத்தினர், தோழர்கள் அனைவருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
8.7.2024

 (கி.வீரமணி)
 தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *