தென்னக ரயில்வேயும் தப்பவில்லை தாமதமாக வரும் ரயில் கோட்டப் பட்டியலில் தென்னக ரயில்வேயும் இடம் பெற்றது

1 Min Read

சென்னை, ஜூலை 8 சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-2023 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னை கோட்டத்தில் நாள்தோறும் சுமார் 300 மெயில் மற்றும் விரைவு ரயில்களும், 170 பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் சேகரித்த தரவுகளின்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களின் நேரம் தவறாமை 2022 – ஜூலையில் 92.67 சதவீதமாக இருந்த நிலையில், 2023- ஜூலையில் 79.58 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும், 2022 ஆகஸ்டில் 96.15 சதவீதத்திலிருந்து 2023- ஆகஸ்டில் 88.49-ஆக குறைந்துள்ளது. அதேபோல், 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆகஸ்ட், டிசம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயணிகள் ரயில்களின் நேரம் தவறாமை சுமார் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2023-2024-ஆம் நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதால், ரயில்கள் தாமத மாக இயக்கப்படுகின்றன. அதேபோல், குண்டூா், ரேணிகுண்டா ஆகிய ரயில்நிலையங்களிலும் இதுபோன்ற மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதும், சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாவதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களைத் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இனி வரும் காலங்களில் ரயில்கள் தாமதமாவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் அடிக்கடி சிக்கி ஊடகங்களில் இடம் பெறும் முக்கிய நிறுவனங்களில் தென்னக ரயில்வே முதலிடம் பெற்றுள்ள நிலையில் நேரம் தவறாமையில் அனைத்து கோட்டத்தையும் விட தென்னக ரயில்வே முதலிடம் பிடித்திருந்தது. தற்போது அந்தப் பட்டியலிலும் இருந்து நீங்கி வடக்கு ரயில்வேக்களோடு இதுவும் இணைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *