இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் : 2 பேர் கைது

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், ஆக.22- இஸ்ரோ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் மோசடி செய்தது அம்பலமானதில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி  மய்யத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10 மய்யங்களில் நடந்தது. இந்த தேர்வை இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் (இஸ்ரோ) நடத்தியது. இதில், தேர்வு மய் யங் களில் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் கலந்து கொண்ட விவரம் தெரிய வந்து உள்ளது. அவர்கள், செல்பேசி வழியே ஒளிப்படங்களை எடுத்து, கேள்விகளை வேறொருவருக்கு அனுப்பி, புளூடூத் வழியே பதில்களை பெற்று வந்துள்ளனர். இதுபற்றி அரியா னாவில் இருந்து தொலைபேசி வழியே ஒருவர் அதிகாரிக்கு உளவு தகவல் அளித்துள்ளார்.

இதுபோன்று வெவ்வேறு தேர்வு மய் யங்களில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் பிடிபட்டனர். உண்மையான நபர்களுக்கு பதிலாக அவர்கள், தேர்வை எழுதியுள்ளனர் என காவல் துறையினர் கூறுகின்றனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையும் தீவிர மடைந்தது. இவர்கள் தவிர, வடமாநில நபர்கள் 4 பேரும் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அய்.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.  இந்த நிகழ்வில் பயிற்சி மய்யங்கள் மற்றும் பிறருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *