திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 21.8.2023 அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில், திருத்தணி, இ.என்.கண்டிகை, சிறீவித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே திராவிடர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, “நம்மை புரட்டிப் போடும் விஞ்ஞானம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.