கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளச் சாராய வியாபாரி கைது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை 7- 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவுக்கு காரணமான வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத் தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் கண் பாதிக்கப் பட்டது. மேலும் 100க்கும் மேற் பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி உள்பட மாநிலம் முழுவதும், கள்ளசாராய வியா பாரிகளை காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர்.

மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அருகே மண்மலை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்ய காவல் துறை யினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் தலை மறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சிபிசிஅய்டி காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் கேரள மாநிலம் அலங்குளத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், அந்த பகுதி காவல்துறையினர் உதவியுடன், அலங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை காவல் துறையினர் கச்சிராயப்பாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் 110 லிட்டர் கள்ளசாராயத்தை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த காவல் துறையினர், அவர் பதுக்கி வைத்திருந்த கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *