இதுதான் கடவுள் பக்தி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்த கொலையாளிகள் பூஜை நடத்தினார்களாம்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 7 – தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததும் ரத்தம் பதிந்த கத்தியை, ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்த பிறகே காவல்துறையிடம் சரணடைந்தனராம்.

இக்கொலைக்கு திட்டமிட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் கூலிப்படையை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 8 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொலையாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்று ரத்த கறை படிந்த அரிவாளை ஆற்காடு சுரேஷின் படத்தின் முன்பு வைத்து பொன்னையன் உள்ளிட்டோர் பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *