பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை

1 Min Read

சென்னை, ஜூலை7- சென்னையில் நேற்று முன்தினம் (5.7.2024) மறைவுற்ற தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கழக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

7.7.2024, பகல் 11.30 மணிக்கு சென்னை செம்பியம் பந்தர் தோட்டம் அரசு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக் கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைவுற்ற ஆம்ஸ்ட்ராங் வாழ்விணையர் ஆ. பொற்கொடியிடம் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தே.செ. கோபால் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள இரங்கல் அறிக்கையைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.

மாநில கழக இளைஞ ரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, வடசென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தி.செ. கணேசன், மாவட்ட இளை ஞரணித் தலைவர் நா. பார்த்திபன், செயலாளர் பா. பார்த்திபன், எருக்கமா நகர் கழக அமைப்பாளர் சொ. அன்பு, மங்களபுரம் கழக அமைப்பாளர் மா. டில்லிபாபு, பூம்புகார் நகர் ச. இராசேந்திரன், அ. செந்தமிழ்தாசன், இராஜேஷ் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *