சென்னை, நவ.18 பொதுமக்களின் நன்மைக் காக பல்வேறு வசதிகளையும், அறிவிப்பு களையும் தமிழ்நாடு மின்வாரியம் வெளி யிட்டு வருகிறது. அந்த வகையில், இப் போதும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறது.
பொதுவாக, அடுக்குமாடி கட்டடங்களில் கரண்ட் மீட்டர்கள், ஸ்விட்ச் பாக்ஸ்கள் என அனைத்துமே, தரைதளத்தில் அமைப்பது வழக்கம். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித் தனியாக மின் இணைப்பு இருக்கும் என் றாலும், இதற்கென்றே தனியான இடம் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்தே ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும், மின்வழங்கல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில், புதிதாக வீடுகள் கட்டப்படுமானால், மின்சார இணைப்புகளின் எண்ணிக்கையும் அதி கரிக்கும். அதேபோல, ஒரே இடத்தில நூற் றுக்கணக்கான மின் இணைப்புகளுக்கான மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் பொருத்தப்படுவது வேறு சில சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகள்
குறிப்பாக, அடுக்குமாடி கட்டடங்களில் பெரிய அளவில் தீ விபத்துகள் கூட ஏற்படு கின்றன. மும்பையில் அடுக்குமாடிக் குடி யிருப்பு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் அடித் தளத்தில் ஒரேஇடத்தில் அதிக எண்ணிக்கை யிலான மீட்டர்கள் மற்றும் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைத்ததே இந்த தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இதற்கு பிறகுதான், தேசிய மின் ஆய்வு ஆணையம், 49 அடி அதாவது 5 மாடிகள், அதற்கு மேற்பட்ட கட்டடங்களில், ஒரே இடத்தில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை வைக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு தளத் திலும் மின் மீட்டர்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியம்
இது தொடர்பாக, மின் ஆய்வுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ள தாவது:
“அடுக்குமாடி கட்டடங்களில் ஒவ்வொரு தளத்திலும் “பஸ்பார் டிரங்கிங்” முறையில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும் என தேசிய மின் ஆய்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக உயரமுடைய அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டுவோர் இந்தப் புதியநடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.பொது கட்டட விதி களின்படி, தமிழ்நாட்டில் 60 அடிஉயரம் அதாவது, 6 மாடிக்கு மேற்பட்டவை அடுக்குமாடி கட்டடங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. ஆனால், தேசிய கட்டட விதிகளின்படி, 49 மீட்டர் அதாவது 5 மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களே அடுக்கு மாடிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
அனுமதி
எனவே, 49 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்டகட்டடங்களின் ஒவ்வொரு தளத் திலும் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்கப்பட வேண்டும்.இதில் ஏற்கெ னவே திட்ட அனுமதி பெற்ற கட்டடங்களை மட்டும் விடுத்து, புதிய கட்டடங்களில் இந்த விதி அமலாக்கப்படுவது உறுதி செய்யப் படும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.