பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் நேற்று (5.7.2024) படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை யும், வேதனையையும் அளிக்கிறது.
அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டியதுடன், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டியவர். அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டப்படியான கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அவரது மறைவால் இழப்புக்குள்ளாகி உள்ள அவரது வாழ்விணையர், மகன் மற்றும் குடும்பத்தி னருக்கும், பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
6.7.2024
தலைவர்
திராவிடர் கழகம்