மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நல்லாசிரியர் தங்க.சிவ மூர்த்தி அவர்களின் மாமனாரும், மாவட்ட ப.க. ஆசிரியரணிஅமைப்பாளர் ஆசிரியர் சிவசக்தி மற்றும் கழகத் தோழர் வேளாண் அலுவலர் ஆத்தூர் வேல்முருகன் ஆகியோரது தந்தையுமான திமுக முன்னோடி இருங்களாக்குறிச்சி இரா. விசுவநாதன் (வயது 76) அவர்கள் நேற்று (5.7.2024) காலை இயற்கை எய்தினார்.அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (6.7.2024) காலை 10 மணியளவில் இருங்களாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– – – – –
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி நகர் திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் தொண்டர் நாகராஜ் நேற்று (5.7.2024) வயதின் முதுமை காரணமாக இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்