திராவிட இயக்க வீராங்கனை மறைந்த செண்பகவள்ளி அம்மையார் நினைவேந்தல் நிகழ்வு

1 Min Read

திருச்சி, ஜூலை 6- திருச்சி மேனாள் நகர கழக துணைத்தலைவர் ஓ.வேலுவின் வாழ்விணையர் மறைந்த செண்பகவள்ளி அம் மையார் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டல் மேக்ஸி அரங்கில் 29.6.2024 அன்று நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் மறைந்த செண்பகவள்ளியின் சகோதரரரும், பெரியாரியல் பற்றாளருமான முனைவர் தி.நெடுஞ் செழியன் அறிமுகவுரையாற்றினார்.

மறைந்த செண்பகவள்ளி அம்மையாரின் உருவப்படத்தைத் திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர் க.முருகேசன் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
திருமலை நெடுஞ்செழியன் தொகுத்த அக்காவின் நினைவ லைகள் என்றும் சிறுநூல் வெளி யிடப்பட்டது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தாம்பரம் கிளைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பெலிசியா இராஜம்மாள் செல்வராணி நூலை வெளியிட்டார். தேனி மாவட்டத்தை சார்ந்த இந்தியக் கலால் துறையின் மேனாள் கண்காணிப்பாளர் ச.சவுந்திரராஜன் நூலைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் வெ.அடைக்கலம், மணவை தமிழ் மாணிகம் ஆகியோர் உரையாற்றினார்கள் விழாவின் நிறைவாக மிசா தி.சாக்ரடீஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *