2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் தமிழாசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமானகே.தேவிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், அரசமைப்புச் சட்டக்குழு, பண்பாடு மற்றும் கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கும், மாணவர் மன்றத் தலைவர், துணைத் தலைவர் விளையாட்டு அணிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்றச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களுக்கும், மற்றும் மன்றங்களுக்கான பொறுப்பாசிரியர்களுக்கும் அவர்களுக்கான ‘பேட்ஜ்’ அணிவித்து சிறப்பு செய்தார். பள்ளியின் மாணவர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி செல்வி.எஸ்.ரவுலா பாத்திமா தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு விழா இனிதே நிறைவுற்றது.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா
Leave a comment