முதுபெரும்பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் 102 ஆவது பிறந்தநாள்

Viduthalai
2 Min Read

பொத்தனூர், ஜூலை6- நாமக்கல் மாவட்டம் பொத் தனூர் க.ச. என்று தோழர்கள் அன்போடு அழைக்கும் முதுபெரும்பெரியார் பெருந்தொண்டர் – பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களது 102 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (02.07.2024) ஊர் மக்கள் பக்கத்து ஊர்களிலுள்ள கழகத் தோழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக அவரது வீட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ச்சியாக ஊர் முக்கிய பிரமுகர்கள் – கழகத் தோழர்கள் – உறவினர்கள் வருகை தந்து பயனாடை, புத்தகப் பரிசுகள் கொடுத்தும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

அறிவிக்கப்படாத நிகழ்ச்சி என்றாலும் திரளாக மக்கள் வந்திருந்தது வாழ்த்தியது அவரது நீண்ட நெடிய தொண்டரப் பணிக்கு நன்றி தெரிவிப்பதாக இருந்தது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் ஆகியோரின் தலைமை ஏற்று அவர்களது நம்பிக்கையைப் பெற்று பெரியாரின் தொண்டர்க்கு என்றும், இன்றும் இலக்கணமாக விளங்கும்படி வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பவர் அதனால்தான் சேலம், நாமக்கல், மேட்டூர், ஆத்தூர், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக திரண்டனர். அதனால்தான் அவ்வளவு கூட்டம். வந்திருந்து அனைவருக்கும் நண்பகல் உணவளிக்கப்பட்டது அவரது மகன் செங்குட்டுவன்-சாந்தி அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தார் அது மட்டுமல்ல அவர்களது குடும்பத்தார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சிவகுமார், ராஜ்குமார், பூங்கோதை, விவேகானந்தம், தமிழரசி, ஜெயமணி, மாசிலாமணி, சிறீரினிகா ஆகியோர் வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.

வருகை புரிந்த கழகத் தோழர்கள் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சுப்ரமணியம், கே. ஆர். ராஜேந்திரன் தமிழர்தலைவர் இளைஞர் அணி அ.ச.இளவழகன் சேலம் மாவட்டத்தலைவர், அரங்க இளவரசன் சேலம் மாநகரத் தலைவர், வீரமணி ராஜு, சேலம் மாவட்டம் ப.க தலைவர் கோ.கல்பனா சேலம் மாநகர ப.க. செயலாளர், சுரேஷ் தலைமைக் கழக அமைப்பாளர், சவுந்தரராஜன் ஓமலூர் ஒன்றிய செயலாளர், ஈரோடு மாவட்டம் த.சண்முகம், மாவட்ட தலைவர் நற்குணன், ப.சத்தியமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் து.நல்லசிவம், தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

நாமக்கல் மாவட்டம் குமார் மாவட்ட தலைவர், வை பெரியசாமி மாவட்ட செயலாளர், மாவட்ட ப.க.தலைவர் வழக்குரைஞர் இளங்கோ, சு.சரவணன் குமாரபாளையம் தலைவர்,கா.பொன்னுசாமி நாமக்கல் மாவட்ட துணை செயலாளர், மு சீனிவாசன் ஒன்றி அமைப்பாளர், சேகர் இளைஞர் அணி தலைவர், செல்வகுமார் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர், ராமச்சந்திரன் நகர செயலாளர்நாமக்கல், ஆசேன் மாவட்ட துணை தலைவர், ஆ. சுரேஷ் இளைஞர் அணி, வீர முருகன் திமுக தொமுச பேரவை, எஸ் அன்புமணி, பொத்தனூர் ராஜசேகரன் மதிமுக, சாகுல் முஸ்தபா ஒன்றிய தலைவர் தி க . பொத்தனூர் பேரூராட்சித் தலைவர் ஆர் .கருணாநிதி. மருத அறிவாயுதம், மாவட்ட துணை தலைவர் ப.க. குமாரசாமி கரூர் மாவட்ட தலைவர், ராசு மாவட்டக் காப்பாளர், அக்பர் ப.க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *