குமரி மாவட்டகழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா வழங்கல்

0 Min Read

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.12000 கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, குமரி மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திராமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *