அ.தி.மு.க. மாநாட்டில் பெண்களை இழிவுபடுத்திய நிகழ்வு தி.மு.க. மகளிர் அணி சார்பில் புகார்

Viduthalai
2 Min Read

மதுரை, ஆக. 23 – அ.தி.மு.க.  மாநாட்டில் கடந்த 20ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடை பெற்றது. இந்த மாநாட்டில் நடை பெற்ற கலை நிகழ்ச்சியில், தி.மு.க. வின் துணை பொதுச் செயலாளரான கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினரை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான பாடல் இடம் பெற்றது.

இந்தப் பாடல் பேஸ்புக், ‘எக்ஸ்’ என்ற டுவிட்டர் உள்ளிட்ட பல் வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் அண்ணா நகர் ராணி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஷ் உள்பட தி.மு.க. மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில், அதன் தலைவர் ஏ.எஸ்.குமரியை நேற்று (22.8.2023) நேரில் சந்தித்து நடவ டிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து, தி.மு.க. மகளி ரணி நிர்வாகிகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

மதுரையில் கடந்த 20ஆம் தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க. வின் மாநில மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனி மொழியை தரைக்குறைவாக விமர் சிக்கும் வகையில் பாடல் பாடப் பட்டது.

அங்கு இருந்த மேனாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கை தட்டி சிரிக்கிறார்கள். நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் கனிமொழி கருணாநிதி. அவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்யவேண்டும்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தி.மு.க. மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக மகளிர் அணி சார் பாக தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

நடவடிக்கை எடுக்காதபட் சத்தில் அடுத்தக்கட்டமாக தமிழ் நாடு முழுவதும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *