தமிழ்நாடு காவல் துறையில் 3359 காலியிடங்கள்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு காவல் துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.

அரசியல்

காலியிடம்: இரண்டாம் நிலை காவலர் பிரிவில் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை 780, சிறப்பு காவல்படை 1819), சிறைத்துறையில் 86, தீயணைப்பாளர் 674 என மொத்தம் 3359 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 783 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இதிலிருந்து வாரிசுதாரர்கள், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவத்தினர், விதவைகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. இதில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

தேர்வுகட்டணம்: ரூ.250

கடைசிநாள்: 17.9.2023

விவரங்களுக்கு:tnusrb.tn.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *