அரூர், ஜூலை 5- அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 30.6.2024ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணி அளவில் அரூரில் கழக காப்பாளர் ஆ தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன் வரவேற்பு உரையாற்றினர். கல்பனா கடவுள் மறுப்பு கூறினார், கடத்தூர் நகரத் தலைவர் நெடுமிடல், மாவட்ட கழகத் தலைவர் கு. தங்கராஜ், அரூர் ஒன்றிய தலைவர் சோலை துரைராஜ், ஒன்றிய பகுத்தறிவாளர்கள் தலைவர் என்.டி. குமரேசன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன், கவிஞர் கீரை பிரபாகரன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
கலந்துரையாடலில், தருமபுரி அரசு கல்லூரியில் பேராசிரியராக, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவராக பணியாற்றி, முத்தமிழ் மன்றம் தொடங்கி கழக சொற்பொழிவாளர்களை அழைத்து பகுத்தறிவு கருத்துகளை கல்லூரியில் பரப்பி பல மாணவர் களை பகுத்தறிவாளர்களாக உருவாக்கிய பேராசிரியர் செலை யன் மறைவிற்கும், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியின் அண்ணன் பாண்டியராஜனின் வாழ்விணையர் ரேவதி அம்மாள் மறைவுக்கும் மாவட்ட கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பின்படி மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை ஜூலை 15-ஆம் தேதி அரூர், மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய இடங்களில் சிறப்பாக நடத்துவது எனவும், பிரச்சார பயணத்தை கழகத் தோழர்கள் ஒன்றிணைந்து வரவேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பயண திட்டத்திற்கு பிரச்சார பயணத்தில் தங்கும் வசதியை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன், இரவு உணவு ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் குமரேசன், காலை உணவு மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மதிய உணவு மாவட்ட தலைவர் கு. தங்கராஜ், அவர்களும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
பரப்புரை பயண பொறுப்பாளர்களாக
அரூர்: சா.ராஜேந்திரன், என்டி குமரேசன், சோலை துரைராஜ், கவிஞர் பிரேம் குமார், மணிமேகலை கல்பனா உமா அம்மாபேட்டை மணி, கிருஷ்ணன்,
மொரப்பூர்: தீ. சிவாஜி, மு.சிவக்குமார், கோ.குபேந்திரன், பச்சையப்பன் கடத்தூர்: தமிழ்ச் செல்வன் மு பிரபாகரன், புலவர் நெடுமிடல், புலவர் சிவலிங்கம், வ. நடராஜன், சொ. பாண்டியன்,
பொம்மிடி: இரா.ஆனந்தன், மு. சிறீதரன், பிரகாசம், பிரதாப், ஹரிகரன், சூர்யா, பெரியார்,
பாப்பிரெட்டிப்பட்டி: மாரி கருணாநிதி, தங்கராஜ், முல்லையரசு, ராஜவேந்கன், தமிழ்ச்செல்வன், திராவிடன், நல்ராஜா, சிவா னந்தம், மோகன்குமார், மருத் துவர் பழனிசாமி, சாய்குமார், தென்றல்பிரியன், ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மணிமேகலை, கல்பனா, உமா, கலையரசி, மணி, கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ. பாண்டியன், கிருஷ்ணன், மாணவர் அணி பொறுப்பாளர்கள் பிரதாப், ஹரிகரன், சூர்யா, அம்மாபேட்டை மணி, கவிஞர் பிரேம்குமார், வேப்பம்பட்டி ராகுல், பாளையம் பசுபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஈச்சம்பாடியில் கிருஷ்ணன் தலைமையில் மகளிர் அணி பொறுப் பாளர்கள் கல்பனா, கலையரசி, விக்டோரியா, மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இறுதியில் அம்மாபேட்டை தோழர் மணி நன்றி கூறினார்.