திருமண வரவேற்பு : நீட் எதிர்ப்பு பதாகை ஏந்தி புதுமண இணையர் பரப்புரை

1 Min Read

அரசியல்

சென்னை, ஆக.23  பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீட் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமண இணையர் திருக் குறள் மற்றும் அம்பேத்கர் புத்தகங்களை வழங்கி கவனம் ஈர்த்தனர். 

பூவிருந்தவல்லியை அடுத்த செம் பரம்பாக்கத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் திருமண வரவேற்பு விமர்சையாக நடைபெற்றது. வழக்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் சாத்துக்குடி தின்பண்டங்கள் என ஏதேனும் பொருள் வழங்குவது வழக்கம்.  ஆனால், இந்த இணையர் தங்கள் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அறிவு சார்ந்து பயனடைய வேண்டும் என்று விரும்பினர்.

இவ்விணையர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சட்ட மேதை அம்பேத்கரின் புத்தகங்களையும் சிறுவர்களுக்கு திருக்குறள் தெளிவுரை புத்தகத்தையும் வழங்கினர்.

 மேலும் மணமக்கள் மேடையில் ‘நீட்’ தேர்வை  நீக்க கோரி பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுமண மக்களின் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *