சிவனே என்று இருக்கும் சிவன் : சிம்லாவில் கனமழையால் சிவன் கோயில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் மரணம்

1 Min Read

சிம்லா, ஆக 23  இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு கார ணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந் திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வரு கின்றன.  இதுவரை அங்கிருந்து 17 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள் ளனர்.  இதுகுறித்து இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் பிர போகத் சக்சேனாநேற்று கூறும் போது, (21.8.2023)  ‘‘இதுவரை 17 பேரின் உடல் களை மீட்டுள்ளோம். இன்னும் 2 பேரின் உடல்கள் உள்ளேயே சிக்கியுள் ளன. அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். மேலும் சிலரின் உடல்கள் உள் ளேயே சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கி றோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அந்த உடல்களையும் மீட்டுவிடுவோம். இப்பகுதியில் நிலச் சரிவால் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து வருகிறோம். சாலைகள் செப்ப னிடப்பட்டு வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *