ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம் பொறுப்பாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் அமைப்பு சாரா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பா.வெற்றி செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். பிறகு ஒசூர் சாராட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்
Leave a comment