தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

2 Min Read

சென்னை, ஜூலை 3- டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்க ளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணைகளை வழங்கினார்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் இரா.கனகராஜ் மற்றும் சிறைத் துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறை வாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில் மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.

கடந்த 2023-2024ஆம் ஆண்டில் சிறைவாசிகளின் நலனுக்கான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முறை மற்றும் உணவின்அளவு ரூ.26 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

600 சிசிடிவி கேமராக்கள் ரூ.11.50 கோடியில் நிறுவப்படவுள்ளது. நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான், ஊடுகதிர்அலகிடும் கருவி போன்ற நவீன உபகரணங்கள் ரூ.5.98 கோடியில் நிறுவப்பட்டுள்ளன.

தொலைபேசி அழைப்புகள்: சிறைவாசி கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களுடன் பேச மாதம் 10 தொலைபேசி அழைப்புகள் செய்திடவும் (ஆடியோ மற்றும் வீடியோ), சிறைவாசிகள் தயாரிக்கும் பொருள்களை காவல்துறை அங்காடி யில் விற்பனை செய்திடவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறை நூலகங்களை மேம்படுத்திட ரூ.2.09 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலு வலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நபர்களுக்கு வேலூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *