கவிப்பேரரசு வைரமுத்துவின் இரங்கல்!

0 Min Read

இரங்கல் அறிக்கை

உத்தரப்பிரதேசத்தில்
ஆன்மிக நெரிசலில்
இறந்துபோன
அத்துணை உயிர்களுக்கும்
அஞ்சலி செலுத்துகிறேன்

சடலங்களுக்கு மட்டுமல்ல
சடங்குகளுக்கும் சேர்த்தே
இரங்குகிறேன்

ஆன்மிகச்
சொற்பொழிவாளரின்
காலடி மண்ணைக்
கவரவேண்டும் என்றுதான்
ஒருவர் காலடியில் ஒருவர்
செத்திருக்கிறார்கள்

இருதயக்கூடு
நொறுங்குகிறது
மது போதைக்கும்
மத போதைக்கும் உள்ளது
பூவுக்கும் புஷ்பத்துக்கும்
உள்ள வேறுபாடுதான்

கல்வி பொருளாதாரம்
பகுத்தறிவு என்ற மூன்றிலும்
மேம்படாத தேசம்
இப்படித்தான்
தவணை முறையில்
இறந்துகொண்டிருக்கும்

‘இருப்பவர்கள் கண்களை
இறப்பவர்கள் திறக்கிறார்கள்’
என்றோர் முதுமொழி உண்டு

இறந்தவர்கள்
இருப்பவர்களுக்குப்
பாடமாகிறார்கள்
படிப்போமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *