‘நீட்’ எதிர்ப்புத் துண்டறிக்கையை பள்ளி-கல்லூரி மாணவர்களிடம் சேர்க்கப்படும் புதுக்கோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

புதுக்கோட்டை, ஜூலை 3- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கலந்துறவாடல் கூட்டம் 29.6.2024 சனிக்கிழமை பகல் 11 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாண வர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்வில் மேலும் மாவட்டச் செயலா ளர் ப.வீரப்பன், பொதுக் குழு உறுப்பினர் செ.இரா சேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சு.கண்ணன், மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாணவர் கழகத்தைச் சேர்ந்த ம.அறிவுமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இராமநாத புரத்தில் இருந்து வரும் நீட் எதிர்ப்புப் பேரணி திருமயம், புதுக் கோட்டையில் வரவேற்று சிறப்பாக இரண்டு இடங்களிலும் நடத்துவது, குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சிமுகாமில் மாணவர்களையும் இளை ஞர்களையும் அனுப்பி வைப்பது, நீட் எதிர்ப்புத் துண்டறிக்கையை கல்லூரி பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, எதிர் வரும் ஜூலை 6 அன்று கந்தர்வக்கோட்டையில் நடைபெறும் தெருமுனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என நான்கு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலாளர் சு.கண்ணன் இதுவரை 170முறை குருதிக்கொடை வழங்கியமைக்காக திரா விடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *