நாமக்கல், ஜூலை 3- நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக நீட் எதிர்ப்பு பிரச்சார பயணம் மற்றும் குற்றால பயிற்சி முகாம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக கலந்து கொள்வது பற்றியும் வாகன பிரச்சாரத்தை வரவேற்பது குறித்தும் பொத்தனூரில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் க.சண்முகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் ஆகு குமார் தலைமையில் க.சண் முகம் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை பெரியசாமி, சேலம் மாவட்ட பொறுப்பாளர் இளவழகன் முன்னிலை வகிக்க தலைமைகழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார்கள் தோழர்கள் பிரச்சாரத்திற்கு நிதியாக பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ ரூபாய் 5000 வழங்கு வதாக அறிவித்தார்கள். மாவட்ட செயலாளர் வை பெரியசாமி ரூபாய் 2000 அறிவித்தார். மாவட்டத் துணைத் தலைவர் அசேன் ரூபாய் 2000 அறிவித்தார். இந்திய கனசங்கம் கட்சி தலைவர் பேராசிரியர் மு பெ முத்துசாமி ரூபாய் 1000 கொடுத்தார். வீர முருகன் ரூபாய் 500 மு சீனிவாசன் ரூபாய் 500 பரமத்தி செங்கோடன் ரூபாய் 1000 தோழர் வசந்தி 500 அறிவாயுதம் 500 மாவட்ட தலைவர் ஆகு குமார் 1500 சரவ ணன் 1500 கலந்துரையாடல் கூட்டத்தில் 16 ஆயிரம் ரூபாய் அறிவித்து 3000 ரூபாய் உடனடியாக கொடுக்கப்பட்டது..
தீர்மானங்கள்
பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா மிக சிறப்பான முறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கப்பட்டது கழகத் தோழர்களும் மாற்று கட்சியைச் சார்ந்த தோழர்களும் நண்பர்களும் அய்யாவுக்கு பயனாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அய்யா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டு காலம் பயணித்து நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்க வேண்டும் என கலந்துரையாட கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது
தலைமைக் கழகம் அறிவித்த நாமக்கல் மாவட்ட ரூபாய் 25,000 வசூலித்துக் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் 14ஆம் தேதி தாராபுரத்தில் தொடங்கி வரும் நான்காவது குழுவும் அதேபோல் கன்னியாகுமரியில் தொடங்கி சேலம் வரை வரும் முதல் குழுவும் நாமக்கல் மாவட் டத்திற்குள் வருகை தருகின்றன இந்த இரண்டு குழுக்களிலும் வருபவர்களை முறையில் வர வேற்று அவர்களுடன் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொன்னுசாமி மாவட்ட துணை செயலாளர் பொத்தனூர் அன்பு ராஜசேகரன் சாகுல் ஈரோடு தோழர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.