‘நீட்’ ஒழிப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
2 Min Read

சேலம், ஜூலை 3- திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலை மையில் சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 1.7.2024 அன்று மதியம் 12 மணிக்கு அம்மாப்பேட்டை குயில் பண்ணையில் நடைபெற்றது.

தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, தர்மபுரி ஊமை ஜெயராமன, ஆத்தூர் அ.சுரேஷ், மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்ர மணியம், சேலம் மாவட்டத் தலை வர் அ.ச.இளவழகன், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடவுள் மறுப்பு வெண்ணந்தூர் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார் கூறினார். சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி வரவேற்புரை ஆற்றினார்.

தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை ஜெயராமன் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆலாசனைகளை எடுத்துரைத்தார்.

சேலம் மாநகர் தலைவர் அரங்க இளவரசன், ஆத்தூர் நகரத் தலைவர் வி.அண்ணாதுரை, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி இராஜீ, பகுத்தறிவாளர் கழக மாநகரச் செயலாளர் கோ.கல்பனா, பழ.பரமசிவம், இல.ப.செல்வக்குமார், இரா.இராசு, ந.விஜய்ஆனந்த், வைரம், சு.இமயவரம்பன், நீ.சேகர், வீ.மணிமாறன், கே.குமாரதாசன், ஜெ.கருணாகரன், பொறியாளர் அ.பாஸ்கர், மு.மோகன்ராஜ், ப.வேல்முருகன், அ.கார்க்கிதாசன், மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் சி.சுப்பிரமணியம், சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ.தமிழர் தலைவர், தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு உள்ளிட்ட தோழர் கள் தம் கருத்துகளையும், நன் கொடையையும் அறிவித்தனர்.

நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் தம் உரையில், தோழர்களின் களப்பணியை பாராட்டி, சிறப்பாக செயல்பட கேட்டுக் கொண்டார். இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தில் பங்கெடுக்கும் தோழர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது குறித்தும், அவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் திட்டமிட்டு மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் கேட் டுக் கொண்டார்.

தோழர்கள் அறிவித்த நன்கொடை விவரம்

நகரத் தலைவர் ஆத்தூர் அண்ணாதுரை – 10,000, சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன் (போஸ்டர் & அழைப்பிதழ்) – 21,000, சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி – 10,000, சூரமங்கலம் பகுதித் தலைவர் பழ.பரமசிவம் – 1000, அம்மாப்பேட்டை பகுதிச் செயலாளர் இமயவரம்பன் – 2000, வழக்குரைஞர் கோ.கல்பனா – 1000,
பகுத்தறிவாளர் கழக சேலம் மாவட்ட தலைவர் வீரமணி இராஜீ (300 தோழர்களுக்கு இரவு உணவு),
அம்மாப்பேட்டை பகுதி கழகம் சார்பில் காலை உணவுக்கு – 15,000,
மேட்டூர் மாவட்ட கழ கக் காப்பாளர் கவிஞர் சி.சுப்ர மணியம் (நன்கொடை) – 31,000

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 102 வயது பிறந்த நாள் நமக்கெல்லாம் பெருமைக்குரிய நாள்.

வருகின்ற 15.7.2024இல் சேலம் மாநகரில் நடைபெற இருக்கின்ற “நீட்” ஒழிப்பு பொதுக் கூட்டத்திற்கு வருகை தர இருக்கின்ற கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று, சிறப்பாக பொதுக்கூட்டத்தை நடத்துவது,
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், கல்வியாளர் களையும் அனைவரையும் சிறப் பாக வரவேற்பது,
கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுரைப்படி நியமிக்கப்பட்டு, அனைத்துக் குழுக்களின் செயல்பாடு, ஒருங்கிணைப்பு இவைகளை நாள்தோறும் ஒருங்கிணைப்பாளர்கள் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களிடமும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடமும் தெரிவித்து, ஆலோ சனைப் பெற்றுக் கொள்வது,

சு.கார்க்கிதாசன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் முடிவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *