பெரியார் விடுக்கும் வினா! (1363)

இன்று கிளர்ச்சி செய்வது என்பது பெரிதல்ல. மக்களைக் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றச் செய்வது என்பது மிக முட்டாள்தனம், உணர்ச்சிமிக்க மக்களை வெகு சுலபத்தில் தட்டி எழுப்பிப் போராட்டம் துவங்கச் செய்ய முடியும் – அதனால் ஏதும் பலன் உண்டாகிறதா என்பதுதான் முக்கியமான காரியமாகும். கிளர்ச்சியின் மூலம் பலன் கிடைப்பது என்று உறுதிப்படுமானால் அதற்கு பின்வாங்கத் தேவையில்லை. ஆனால், அதே நிலையில் வீண் கிளர்ச்சி செய்வதனால் பலன் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *