கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ரூ.3,50,000 கிடைக்கும்.
வீடு கட்ட 3 தவணையாக பணம்
1. அஸ்திவாரம் போட்ட பிறகு முதல் தவணை பணம் கிடைக்கும்.
2. கூரை (Roof) காங்கரீட் போட்ட பிறகு இரண்டாவது தவணை பணம் கிடைக்கும்.
3. வீடு முடிவு நிலை முடிந்த உடன் 3ஆவது தவணை பணம் கிடைக்கும்.
இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் திட்டமாகும்.
அனைத்து கிராமப்புற மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கு – ஒர் அரிய வாய்ப்பு.
1. வாடகை வீட்டில் இருக்க வேண்டும்
2. கிராமப்புறத்தில் ஏதாவது இடம் வாங்கி போட்டு இருந்தால் பட்டா இடமாக இருக்க வேண்டும்.
3. இடம் மனுதாரர் பெயரில் இருக்க வேண்டும்
4. அரசாங்க வேலை பார்க்கக் கூடாது
கொண்டு வரக்கூடிய ஆவணங்கள் :
1. பத்திரம் நகல்
2. பட்டா நகல்
3. கம்ப்யூட்டர் பட்டா
4. வில்லங்க சான்று
5. காலி மனைக்கு கரம் தீர்த்த ரசீது
6. ரேஷன் கார்டு நகல்
7. ஆதார் கார்டு நகல்
விண்ணப்பம் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவருக்கு எழுதி ஆவணங்கள் அனைத் தும் வைத்துக் கொடுக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அந்த மனு வந்த உடன் விசாரணை நடைபெறும்
வீடு மொத்தம் 350 சதுர அடிகள் இருக்க வேண்டும்.