‘‘நீட் தேர்வே வேண்டாம்!’’ கொரட்டூரில் விளக்கக் கூட்டம்!

Viduthalai
1 Min Read

கொரட்டூர், ஜூலை 2 ‘‘நீட் தேர்வே வேண்டாம்’’ பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 427 ஆவது வார நிகழ்வு 29.06.2024 அன்று மாலை 7.00 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்க, ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலையில், மாவட்ட மகளிரணி தோழர் சி‌.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க. பேச்சாளர் கவிஞர் மா.வள்ளிமைந்தன், மேனாள் நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரகுமார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் ஆறுமுகம், கருப்பசாமி, மணி, சுமதி, கெஜலட்சுமி, உதயசூரியா, சாக்கு,பிச்சை மணி, சாம் டேனியல், சசிகுமார், சிவா சரத்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆவடி மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *