தாம்பரம், ஜூலை 2- “நீட் எதிர்ப்பு இருச்சக்கர வாகனப் பிரச்சார பயணம்”தொடர்பாக தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 30.6.2024 மாலை 5 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகள் அவர்கள் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்துரை மற்றும் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட கழகத் தோழர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்கினர். இறுதியாக மாவட்ட இளைஞரணித் தலைவர் கரைமா நகர் தே.சுரேஷ் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் தி.திலீபன், தி.தீபக் ஆகிய இளைஞர்கள் ஆர்வமுடன் புதியதாக கலந்து கொண்டனர்.இறைவி,இரா.சு.உத்ரா,எஸ்.நூர்ஜகான்,கு.மீனாம்பாள், அ.ப.நிர்மலா,ஜெ.தேவி,கு.பிரீத்தா ஆகிய மகளிரணி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ந.கரிகாலன்,தி.இர.சிவசாமி, பி.சி.ஜெயராமன்,வழக்குரைஞர் இரா.உத்திரகுமாரன்,கடப்பேரி அரங்க.நாராயணன்,செஞ்சி ந.கதிரவன்,மா.இராசு,ஆ.விஜய், பாலமுரளி,எஸ்.ஆர்.வெங்கடேஷ், க.தமிழ்ச்செல்வன்,பி.சீனிவாசன், அ.கருப்பையா,ஜெ.குமார், எ.புருசோத்தமன், பழனிசாமி, தி.ஆனந்தன், செ.சந்திரசேகரன், வாசல்.எழிலன், எஸ்.இராமசந்திரன், மா.ப.தமிழேந்தி, ஆர்.இரவிசந்திரன், பெரியார் பிஞ்சு ச.பொற்செழியன் மற்றும் சு.மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நீட் எதிர்ப்பு இரு ச்சக்கர வாகனப் பிரச்சார பயணத்தில் தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்று, பயணக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், நீட் பரப்புரை பயண நிறைவு விழாவில் சேலம் பொதுக்கூட்டத்தில் கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நீட் எதிர்ப்பு இருச்சக்கர பிரச்சார பயண நன்கொடையாக கழகத் தோழர்கள் ரூபாய் 15,400 மகிழ்வுடன் வழங்கினர்.