அக்டோபர் 6 தஞ்சையில் தாய்க் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா – ஆலோசனை

1 Min Read

அரசியல்

திராவிடர் கழகமாம் தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 தஞ்சாவூர் திலகர் திடலில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது. தி.மு.க தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திர சேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண். இராமநாதன், திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, திமுக தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, திமுக ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் 23-8-2023 அன்று இரவு 8.30 மணிக்கு தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து விழா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். மாநாடு போல் மக்கள் கடலில் விழாவினை மிக எழுச்சியுடன் நடத்திடுவோம் என உறுதி அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *