கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு உயர்த்துவதற்கு புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் இயற்ற காங்கிரஸ் வலியுறுத்தல்.

* எதிர்க்கட்சி தலைவராக எதற்கும் துணிந்த ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆளும் மோடி அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.

*பாஜகவுக்கு பாடம் புகட்ட ‘இந்தியா’ கூட்டணி புது வியூகம்; துணை சபாநாயகர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்?: கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு.

* கோவிட் காரணத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை குறிப்பெடுக்கும் பத்திரிக்கையாளர்கள் குறைக்கப்பட்ட எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்.

தி டெலிகிராப்:

*மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பலவற்றைப் பேசிய பிரதமர் மோடி, எரிந்து கொண்டிருக்கும் நீட் தேர்வு மோசடி குறித்து வாய் திறக்கவில்லை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராஷ்டிரா தேர்தலில் தங்கள் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசிய காங்கிரஸ் (சரத்பவார்) இணைந்து போட்டியிடும்: சரத் பவார் அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *