மேலூர், ஜூலை 1 மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பேட்டி வருமாறு:
அயோத்தியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். மத வெறி அரசியல் குறியீடாக அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் மீண்டும் பா.ஜ.க. சொல்லி வந்தது.
பிரதமர் பேச்சில், அயோத்தியில் ஆயிரம் ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறினார். இந்த தேர்தலுக்கு பிறகான குடியரசு தலைவர் உரையில், அயோத்தி என்ற வார்த்தையை மோடி பேசவில்லை. வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பா.ஜ.க. கை கழுவி விடும். அயோத்தியில் வெற்றி பெற்ற அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்ற அவையில் மோடிக்கு நேர் எதிரில் அமர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பா.ஜ.க. கைகழுவி விடும்: மதுரை சு.வெங்கடேசன் எம்.பி அதிரடி

Leave a Comment