கால்நடை மருத்துவக் கல்லூரி விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 3 முதல் 5ஆம் தேதி வரை அவகாசம்!

1 Min Read

சென்னை, ஜூலை 1- கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5ஆம் தேதி வரை அவகாசம் தரப் பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உரத்தநாடு, சேலம் தலைவாசல், உடு மலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் – பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு – பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் உணவு தொழில்நுட்பம் (பி.டெக்), பால்வள தொழில்நுட்பம் (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி – மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில் நுட்பம் (பி.டெக்) ஆகிய பட்டப் படிப்புகள் உள்ளன. இவை 4 ஆண்டு கால படிப்பாகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்புகளில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் இணைய வழியில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி கடந்த ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

பிவிஎஸ்சி – ஏஹெச் படிப்புக்கு 14,497 பேர், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேர் என மொத்தம் 17,497 பேர் விண்ணப் பித்துள்ளனர். இந்நிலையில், மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது, தவறு செய்திருந்தால், அதற்கான திருத்தங் களை மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *