செந்தலை ந.கவுதமன் துணைவியார் உலகநாயகி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

அரசியல்

கோயம்புத்தூர், சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமனின் வாழ்விணையரும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் சூ.ப.அரங்கசாமி (எஸ்.பி.ஆர்.) – பள்ளபாளையம் சானகி இணையரின் மகளுமான சூ.அர.உலகநாயகி  (வயது 62) 23.8.2023 அன்று இரவு மறைவுற்றார்.

செகதாம்பாள் எனும் இயற்பெயரைத் தமிழுணர் வால் உலகநாயகி எனச் சட்டப்படி மாற்றிக் கொண்டவர்.

தாலி இல்லாத சுயமரியாதைத் திருமணம் ஏற்று, உறுதியான பகுத்தறிவு வாழ்வை மனநிறைவோடு மேற்கொண்டவர்.

மகள் க. தாய்மொழி – மருமகன் மரு.கு.இளந்தமிழன் பெயர்த்தி தா.இ.அவனி இளமொழி  முதலான அனைவரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்.

அம்மையாரின் உடல் சூலூர் எஸ்.வி.எல்.நகர் ‘தாயகம்’ இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சூலூர் சமத்துவவனம் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 9944486226

குறிப்பு: கழகத் தலைவர் இன்று (24.8.2023) காலை தொலைபேசியில் புலவர் கவுதமன் அவர்களிடம் பேசி, ஆறுதல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *