சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை, அய்ந்துமுனை இரு சக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் – ஆசிரியர் அவர்களின் நிறைவு சிறப்புரை

சேலம், ஜூன் 30- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ‘நீட்’: சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி எனும் 500 புத்த கங்களை சேலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் எஸ் சுரேஷ்குமார், சேலம் மாநகர செயலாளர் வழக்குரைஞர் கோ. கல்பனா மற்றும் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சி. பூபதி, மாநகரச் செயலாளர் அரங்க இளவரசன் ஆகியோர் சேலம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம், சேலம் மாவட்ட கிரி மினல் பார் அசோசியேஷனின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அனைத்து வழக்குரைஞர்கள், நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொது மக்கள் அனைவருக்கும் புத்தகங்களை கொடுத்து குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிக்கொண்டனர்.

தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டு நர்கள், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் அனைவருக்கும் ‘நீட்’: சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி புத்தகத்தையும், 15.07.2024 நாளது பொதுக்கூட்ட பரப்புரை துண்டறிக்கைகளையும் கொடுத்து
சமூகநீதிக்காக வாழ்கை முழுமையும் போராடும் தமிழர் தலைவர் அவர்களின் கரங்களின் வலிமையை கூட்டிட குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டினார்கள்.
மக்கள் அனைவரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *