சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை, அய்ந்துமுனை இரு சக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் – ஆசிரியர் அவர்களின் நிறைவு சிறப்புரை

1 Min Read

சேலம், ஜூன் 30- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ‘நீட்’: சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி எனும் 500 புத்த கங்களை சேலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் எஸ் சுரேஷ்குமார், சேலம் மாநகர செயலாளர் வழக்குரைஞர் கோ. கல்பனா மற்றும் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சி. பூபதி, மாநகரச் செயலாளர் அரங்க இளவரசன் ஆகியோர் சேலம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம், சேலம் மாவட்ட கிரி மினல் பார் அசோசியேஷனின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அனைத்து வழக்குரைஞர்கள், நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொது மக்கள் அனைவருக்கும் புத்தகங்களை கொடுத்து குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிக்கொண்டனர்.

தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டு நர்கள், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் அனைவருக்கும் ‘நீட்’: சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி புத்தகத்தையும், 15.07.2024 நாளது பொதுக்கூட்ட பரப்புரை துண்டறிக்கைகளையும் கொடுத்து
சமூகநீதிக்காக வாழ்கை முழுமையும் போராடும் தமிழர் தலைவர் அவர்களின் கரங்களின் வலிமையை கூட்டிட குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டினார்கள்.
மக்கள் அனைவரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *