இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.25 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மீனவர் நலனில் அக்கறை கொண்ட இவ்வரசானது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.  அதன்படி விடுபட்டுப் போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டு படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க அரசாணை எண்.523 கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *